"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/7/17

தீவிரவாதத்துக்குத் துணைபுரிவதாகக் குற்றம்சாட்டப்பட்டு கத்தார், வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. சவுதி, பக்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்தன.

வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கத்தாருக்கு சில நிபந்தனைகள் விதித்து அதற்கு ஒப்புக்கொண்டால் தடை விலக்கப்படும் என சவுதி அரேபியா அறிவித்த போது அதற்கு கத்தார் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதைத்தொடர்ந்து, அரபு நாடுகளின் நடவடிக்கையால் கத்தார் மிகவும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வணிக, வர்த்தக மற்றும் தூதரக உறவு முறிக்கப்பட்டதால் கத்தார் நிறுவனங்கள், மாணவர்கள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் குற்றம் சுமத்தி வருகிறது.

இதற்கெல்லாம் ஈடு செய்யும் வகையில், அரபு நாடுகள் கத்தாருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.