.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/1/17

துபையில் அதிவேகமாக சென்று அரைமணி நேரத்திற்குள் 6 முறை ரேடார் கேமராவில் சிக்கியவருக்கு முறையான காரணமிருந்ததால் மன்னிப்பு வழங்கியது துபை போக்குவரத்து காவல்துறை. அதேவேளை 7 முறை ரேடார் கேமராவில் சிக்கியவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பிரசவ வலியால் துடித்த தன் மனைவியை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் சென்றதால் அரைமணி நேரத்திற்குள் 6 முறை ரேடார் கேமராவில் சிக்கியவர் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்ததால் மன்னிக்கப்பட்டார். அதேவேளை தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அதிவேகத்தில் சென்றேன் எனக்காரணம் கூறிய 7 முறை ரேடார் கேமிராவில் சிக்கியவருக்கு அபராதம் மற்றும் இதர தண்டனைகள் வழங்கப்பட்டன. ஏனெனில், இறுதிச்சடங்குகள் நேரம் குறிக்கப்படாமல் திடீர் என ஏற்பாடு செய்யப்படுவதல்ல எனக்கூறி 'காரணத்தை' நிராகரித்தனர்.

கடந்த ஆண்டு 1628 வாகன ஓட்டுனர்கள் மிக அதிகபட்ச கரும்புள்ளிகள் பெற்றதால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதில் 169 லைசென்ஸ்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டதுடன் 24 லைசென்ஸ்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு ஓட்டுனர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களில் பலர் சிக்னலில் எல்லை கோட்டைத்தாண்டிய டிரக் டிரைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதற்கான 5 முக்கிய காரணிகள்:

1. மது மற்றும் போதை வஸ்துகளை பாவித்துவிட்டு வாகனத்தை இயக்குதல்.

2. டிராம் வாகனம் செல்லும் வழிகளில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுதல்.

3. நம்பர் பிளேட் இல்லாத நிலையில் சாலையில் வாகனத்தை இயக்குதல்.

4. காயங்கள் ஏற்படும் அளவுக்கு விபத்து நடந்துள்ள நிலையில் நிற்காமல் செல்லுதல்.

5. ஆபத்தான முறையில் டிரக்குகளை தடம்மாறி முந்திச் செல்லுதல்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.