.

.
5/7/16

புனித ரமழான் மாதத்தின் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களிலும், வெளிநாட்டு அமைப்புகள் பல்வேறு திடல்களிலும் நடைபெறுவது வழக்கம். இதில் அனுமதி பெற்ற அமைப்புகளும், அனுமதி பெறாமல் வெறுமனே வசூல் செய்வதற்கென்றே நடத்துவதும் குவைத்தில் சர்வ சாதாரணம்.

ஆனால், இந்த வருடம் மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக திடல்களில் பெருநாள் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குவைத் அவ்காஃப் & இஸ்லாமிய விவகாரங்கள் துறை மற்றும் நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு யஃகூக் அல் ஸானிஃ தெரிவித்துள்ளார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புனித ரமழான் இரவு தொழுகைகள் நடைபெறும் பள்ளிவாசல்களை பார்வையிட்ட பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். “அதனால், இந்த வருடம் பெருநாள் தொழுகை பள்ளவாசல்களில் மட்டுமே நடைபெறும்” என்று கூறியுள்ளார்.

மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம், பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் “குவைத் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை சுட்டிகாட்டி, பள்ளிவாசல் அல்லாத இடங்களில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டால் அமைப்பின் பதிவு இரத்து செய்யப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

– அபூ ஜைனப்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>