"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
3/3/16

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பானியம் கிராமம் பி.சி.காலனியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி ஹசினா. இந்த தம்பதிக்கு தனா (வயது 3) என்ற பெண் குழந்தையும், ரிஹான் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

ஹசினா, அழுதுகொண்டு இருந்த தனது மகளுக்கு சாப்பிட சாக்லெட் கொடுத்தார். அதை சாப்பிட்ட தனா சிலவற்றை தரையில் கொட்டினாள்.
அருகில் தவழ்ந்து கொண்டு இருந்த 10 மாத குழந்தையான ரிஹான் சாக்லெட்டை எடுத்து விழுங்கியது.

இதில் சாக்லெட் தொண்டையில சிக்கி கொண்டது. இதனை கவனித்த தாய் ஓடிவந்து வாயில் விரலை விட்டு எடுக்க முயன்றார். ஆனால் சாக்லெட் தொண்டையில் சிக்கி ஒட்டிக் கொண்டது மூச்சுதிணறிய குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்து போனது. குழந்தையின் பிணத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.